சங்கரராமன்: ஜெயேந்திரர் உள்பட 24 பேர் மீது செப்-5ல் குற்றச்சாட்டு பதிவு
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் வரும் செப்டம்பர் 5ம் தேதி ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள்பதிவு செய்யப்படவுள்ளன.
இந்த வழக்கில் மொத்தம் 24 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்ரூவர் ஆனதால் ரவி சுப்பிரமணியம்மீது குற்றப் பத்திரிக்கை தாக்கலாகவில்லை.இந் நிலையில் இந் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி குற்றம் சாட்டப்பட்டவர்களில் 9 பேர் மனு செய்திருந்தனர். இந்தமனுக்களை செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி இன்று தள்ளுபடி செய்தார்.
மேலும் வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த வழக்கில் 24 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும், அன்றைய தினம்அனைவரும் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு செம்படம்பர் 3ம் தேதி தான் சங்கரராமன் கோவிலுக்குள் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் போலி குற்றவாளிகளை தயார் செய்து சரணடைய வைத்த தில் பாண்டியன், ஆறுமுகம், சதீஷ் ஆகியோரின்ஜாமீன் மனுக்களையும் நீதிபதி இன்று தள்ளுபடி செய்தார்.