இட ஒதுக்கீடு: சட்ட திருத்தம் குறித்து 23ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்
டெல்லி:
தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது குறித்து விவாதிக்க வரும் 23ம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் இந்த உத்தரவை விமர்சித்துள்ளன.இக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என திமுக கூட்டணி உள்ளிட்ட பலகட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. திமுக சார்பில் இந்த விஷயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டு வரப்ப்பட்டது.
இதையடுத்து இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. இந்நிலையில் வரும் 23ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கூட்டியுள்ளார்.
இது குறித்து சிங் கூறுகையில், உச்ச நீதிமன்றத்துடன் மத்திய அரசு மோதல் போக்கை மேற்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தில்தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை முன்னெடுத்துச் செல்ல்வே இக் கூட்டம் கூட்டப்படுகிறது.
இட ஒதுக்கீடு குறித்த தனது நிலையை மத்திய அரசு அக் கூட்டத்தில் விளக்கும். மேலும் இக் கல்லூரிகளின் கட்டணம் குறித்தும்விவாதிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications