மீண்டும் தியானத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி
மேட்டூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மன அமைதிக்காக பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வர வித்யாலயாவில்மீண்டும் தியானத்தில் ஈடுபட்டார்.
மன அமைதி தேடி மேட்டூரில் உள்ள பிரம்மகுமாரிகள் மையத்திற்கு திடீரென வந்த முத்துலட்சுமியை அந்த மையத்தின்ராஜயோகா ஆசிரியை அகிலாவை சந்தித்தார்.இதையடுத்து (ரக்ஷாபந்தனை ஒட்டி) முத்துலட்சுமிக்கு ராக்கி கயிற்றையும் கட்டிவிட்டார் அகிலா.
பின்னர் சுமார் 1 மணி நேரம் அந்த மையத்தில் அமர்ந்து தியானம் செய்த முத்துலட்சுமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
1994ம் ஆண்டில் இருந்தே இந்த மையத்திற்கு முத்துலட்சுமி வந்து செல்வது உண்டாம். ஆனால், இப்போது மிக நீண்டநாட்களுக்குப் பின் அவர் வந்து தியானம் செய்துள்ளார்.
வீரப்பன் பெயரில் புதிய அமைப்பைத் துவக்குவதாக அறிவித்துள்ள முத்துலட்சுமி வீரப்பன் நடமாடிய மலைப் பகுதிகிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அத்தோடு மிகத் தீவிரமான ரகசிய போலீஸ் கண்காணிப்பிலும்இருக்கிறார்.
இதனால் நிம்மதி இழந்துபோய்க் காணப்படும் முத்துலட்சுமிக்கு இப்போது தியானமே துணையாக உள்ளதாகத் தெரிகிறது.