தேரோட்டத்தில் பயங்கரம்: கலசத்தில் மின்சாரம் பாய்ந்து 7 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடந்த தேரோட்ட நிகழ்ச்சியின்போது தேர் உச்சியில் இருந்த கலசம் மின் கம்பத்தில் உரசியதில்மின்சாரம் பாய்ந்து 7 பேர் உடல் கருகி படுகாயம் அடைந்தார்கள்.

இதையடுத்து பொது மக்கள் தேவையில்லாமல் துணை மின் நிலையத்தைத் தாக்கி சூறையாடினர்.

பண்ருட்டி பாரதி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை தேரோட்டம்நடந்தது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.

காலை 11 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. பண்ருட்டி-சென்னை நெடுஞ்சாலையில் தேர் வந்து கொண்டிருந்தது.ஏராளமான பக்தர்கள் தேரை பிடித்து இழுத்து வந்தனர். அப்போது சாலையின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின்சாரக் கம்பி,தேரின் உச்சியில் இருந்த கலசத்தில் பட்டது. இதையடுத்து தேர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் தேரில் அமர்ந்திருந்த 7 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தஅவர்களை உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இவர்களில் 3 பேரின் நலை கவலைக்கிடமாகஉள்ளது. அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் தேரின் ஒரு பகுதியும் கருகி விட்டது. இந்த விபத்தையடுத்து கோபமடைந்த மக்தர்கள் அருகில் இருந்த துணைமின் நிலையத்திற்குள் புகுந்து கல்வீச்சிலும், சூறையாடலிலும் இறங்கினர்.

போலீசார் ஓடி வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+