விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரம்
பெங்களூர்:
நேற்று கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படையின்ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டை இன்றும் தொடரந்து நடந்து வருகிறது.
கேவாவில் இருந்து விசாகப்பட்டிணம் கிளம்பிய கமோவ்-28 என்ற நீர்மூழ்கிகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியது.கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கானாபூர் மலைப் பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அந்த ஹெலிகாப்டர்விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 4 வீரர்கள் பலியாகிவிட்டனர். இருவர் பலத்த காயங்களுடன்உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் செல்போன் மூலம் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர்.
இதையடுத்து விபத்து நடந்த இடத்துக்கு கடற்படை ஹெலிகாப்டர்கள் விரைந்தன. ஆனால், கடும் மழை மற்றும் காற்றுகாரணமாக அந்த இடத்தை அடையாளம் காண முடியவில்லை. மேலும் மீட்பு ஹெலிகாப்டர்களால் அந்த மலைப் பகுதியில்தரையிறங்கவும் முடியவில்லை.
நள்ளிரவு வரை தேடுதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று காலை முதல் மீண்டும் தேடும் பணி தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications