ஜெயேந்திரருக்கு செங்கை நீதிமன்றம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு :

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் வந்தே தீர வேண்டும்.வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அமர்வு நீதிபதி அக்பர் அலி கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

சங்கரராமன் கொலை வழக்கு செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் சதுர்மாஸ்ய விரதம் இருப்பதாக கூறி திருப்பதியில் போய் தங்கியுள்ளனர். இதனால்விசாரணைக்கு வராமல் உள்ளனர்.

இந் நிலையில் சதுர்மாஸ்ய விரதம் இருப்பதால் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும் என்றுஜெயேந்திரர், விஜயேந்திரர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது விசாரணை நடந்தபோது, இரு சங்கராச்சாரியார்களும் விசாரணைக்கு வராமல் இருப்பதற்கு அரசு வழக்கறிஞர்ஆட்சேபம் தெரிவித்தார். அதை ஆமோதித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு வரும்படி அழைத்தால் ஆஜராக வேண்டியதுஅவசியம். அதை யாரும் மீற முடியாது. விலக்கு கேட்பதை அனுமதிக்க முடியாது.

வரும் 31ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் விசாரணைக்கு ஆஜராகியே ஆகவேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் செப்டம்பர் 17ம் தேதிக்கு மேல் வழக்கை ஒத்திவைக்கக கோரினார்.அதை அரசு வக்கீல் எதிர்த்தார்.

இதையடுத்து செப்டம்பர் 5ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட 24பேரும் வரவேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+