For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீராவிடம் சாவ்லா விருது பணத்தை பறிக்க முயலும் பஞ்சாயத்து

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்குரிய ரூ. 5 லட்சம் பணத்தை கிராம பஞ்சாயத்திடம் கொடுக்க மாட்டேன் என இந்தஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது பெற்ற கடலூர் பெண்மணி மீரா தெரிவித்துள்ளார்.

Meera getting award from Jayaகடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மீரா. சுனாமி தாக்குதலின்போது தனது உயிரைப்பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான கிராம மக்களை மீட்டார். இதைப் பாராட்டும் விதமாக அவருக்கு இந்த ஆண்டுக்கானகல்பனா சாவ்லா விருதை தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியின்போதுவழங்கினார்.

தற்போது மீராவுக்கு புதிய பிரச்சினை ஒன்று கிளம்பியுள்ளது. ஊர்ப் பஞ்சாயத்து என்ற பெயரில் மீராவையும், அவரதுகுடும்பத்தினரையும் அழைத்த ஊர்ப் பெரியவர்கள், கல்பனா சாவ்லா விருது மூலம் கிடைத்த ரூ. 5 லட்சம் பணத்தையும்கிராமத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் மீரா அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது மகளின் படிப்புச் செலவுக்கும், உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவரின்சிகிச்சைக்காகவும் விருதுப் பணத்தை செலவிட அவர் திட்டமிட்டிருந்தார்.

இந் நிலையில் ஊர்ப் பஞ்சாயத்து என்ற பெயரில் ஆலமரத்தடியில் உட்கார்ந்து வெட்டிக் கதை பேசும் கும்பல் ஒன்று இந்தப்பணத்தைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அந்தக் கும்பலின் தீர்ப்பை மீரா எதிர்த்தார். ஆனால் பணத்தைக் கொடுக்குமாறு அவருக்கு பஞ்சாயத்தார் நெருக்கடி கொடுக்கஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து கடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்துள்ளார் மீரா. இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊர் பஞ்சாயத்து வெட்டிக் கும்பலின் மிரட்டல் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் புகார் கொடுத்துள்ளார் மீரா.இதுதொடர்பாக போலீஸ் விசாரணைக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X