ராஜிவ் பிறந்த தினம்: பிரதமர், சோனியா மலரஞ்சலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 61வது பிறந்த தினத்தையொட்டி அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
டெல்லியில் உள்ள அவரது சமாதியான வீர் பூமியில் துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங்,ராஜிவின் மனைவியும் காங்கிரஸ் தலைவியுமான சோனியா காந்தி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதி அப்துல்கலாமின் சார்பில் மலர் வளையமும் வைக்கப்பட்டது.ராஜிவின் மகள் பிரியங்கா, மத்திய அமைச்சர்கள், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் ஏராளமான அளவில் திரண்டிருந்துஅஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் ராஜிவின் உருவப் படத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர்வாசன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
காங்கிரஸ் அலுவலகத்தில் நடக்கும் ராஜிவின் நிகழ்ச்சியில் திமுகவின் சார்பில் மூத்த அமைச்சர் பங்கேற்றது இதுவேமுதல்முறையாகும்.
இதே போல நாடு முழுவதும் ராஜிவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ரத்த தான முகாம்கள், தீவிரவாத எதிர்ப்புஉறுதியேற்பு ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications