சிங்கப்பூர் பல்கலை.யில் தமிழில் பட்டப் படிப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் தமிழிலேயே படித்துப் பட்டம் பெறும் வகையில் பட்டப்படிப்புஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் யுனிசிம் என்ற புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் நான்காவது பல்கலைக்கழகமாகும்இது. இந்தப் பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் தமிழில் பட்டப்படிப்பு படிக்கும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.இந்தப் பட்டப்படிப்பில் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் . மதுரை காமராஜர்பல்கலைக்கழகத்துடன் இதுதொடர்பாக யுனிசிம் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி, மதுரைகாமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள், யுனிசிம் பல்கலைக்கழகத்திற்கு வந்து பாடம் நடத்துவார்கள்.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பேராசிரியர் சியாங் ஹூ கியாட் கூறுகையில்,
கலை, தமிழ் மொழி, ஊடகம் ஆகியவற்றில் இந்தப் பட்டப்படிப்பு தொடங்கப்படுகிறது. இந்தப் பட்டப் படிப்புக்கு நல்லவரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஏற்கனவே தமிழ் ஒரு பாட மொழியாக உள்ளது. இருப்பினும்முழுவதும் தமிழிலேயே படித்துப் பட்டம் பெறும் முறை இப்போதுதான் முதல் முறையாக அங்கு அறிமுகமாகிறது.