For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரச்சாரத்துக்கு அம்மா கூப்பிட்டா வருவேன்: விஜயசாந்தி

By Staff
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை:

அரசியலில் வெற்றி பெற நடிகர் விஜயகாந்த் இன்னும் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நடிகை விஜயசாந்திஅறிவுரை கூறியுள்ளார்.

ஆந்திர சூப்பர் ஸ்டாரினியான விஜயசாந்தி அவ்வப்போது அரசியல் பக்கம் பரபரப்பூட்டுவார். தமிழகத்தில் ரஜினிஅரசியலில் எப்போது குதிப்பார் என்று நீண்ட நெடுங்காலமாக எதிர்ப்பார்ப்பு இருப்பதைப் போல விஜயசாந்தியும் தீவிரஅரசியலில் குதிக்கப் போவதாக சொல்லிக் கொண்டே வந்தார்.

பல கால குழப்பத்திற்குப் பிறகு தற்போது ஒரு வழியாக புதிய கட்சியைத் தொடங்கப் போகிறார் விஜயசாந்தி. தெலுங்கானாமாநிலத்தை உருவாக்குவதே லட்சியம் என்ற கோரிக்கையுடன் தனது கட்சியைத் தொடங்குகிறார் விஜயசாந்தி.

இந் நிலையில் திருவண்ணாமலைக்கு வந்த விஜயசாந்தி கிரிவலம் சுற்றினார். பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச்சென்று வழிபட்டார். சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த விஜயசாந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எனது தனிக்கட்சி வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நிச்சயம் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியே தீருவேன். புதியகட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பேன்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி எனக்கு எப்போதுமே உண்டு. தமிழக சட்டசபைத் தேர்தலில் அம்மா அழைத்தால் நிச்சயம்பிரசாரம் செய்வேன். அதற்கு இன்னும் நாள் உள்ளது.

நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன். ஆனால் அரசியலில் வெற்றி பெற விஜயகாந்த் கடுமையாக உழைக்கவேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என்றார் விஜயசாந்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X