சென்னை, கடலூரில் தொடர்ந்து இன்றும் கடல் கொந்தளிப்பு: மக்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை எண்ணூ

சென்னையில் கடந்த 2 நாட்களாகவே கடலில் கொந்தளிப்பு காணப்பட்டது. பெளர்ணமி காரணமாக இந்த கடல் கொந்தளிப்புஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டாலும் கூட கடல் நீர் தெருக்களுக்குள் வந்ததால் பொது மக்களிடையே பீதி நிலவி வருகிறது.

நேற்று காலையில் இந்தோஷேனியா அருகே கடலுக்கு அடியில் 5.5 என்ற ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்படடது. ஆனால்,இது சுனாமி அலையை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி மிக்கது அல்ல என்பதால் சென்னை, கடலூரைத் தாக்கிய பெரிய அலைகள்சுனாமி அலைகள் அல்ல என்பது உறுதியாகியுள்ளது.

சென்னையிலும் கடலூரிலும் வியாழக்கிழமை முதலே கடலில் மாற்றம் காணப்படுவதாக கடலோரப் பகுதி மக்கள் கூறுகிறார்கள்.அன்று இரவு எண்ணூ

ஆனால் வெள்ளிக்கிழமை இரவு சிவகாமி நகர் உள்ளிட்ட சில இடங்களில் கடல் நீர் பெருத்த சப்தத்துடன் ஊருக்குள் புகுந்துதெருக்களில் ஓடியது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடம் தேடி ஓடினர்.

சனிக்கிழமை அதிகாலை நிலைமை சற்று இயல்புக்கு வந்தது. இருப்பினும் காலை 7 மணிக்கு மேல் மீண்டும் கடல் கொந்தளிப்புஏற்பட்டு, கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் மீண்டும் பீதியில் ஆழ்ந்தனர். பாதுகாப்பானஇடங்களுக்கு குடும்பத்துடன் மீண்டும் இடம் பெயர்ந்தனர்.

சென்னையில் பல இடங்களில் 1 கி.மீ. அளவுக்கு கடல் நீர் உள்ளே வந்தது. ஐஸ் ஹவுஸ் பகுதியில் விவேகானந்தர் இல்லத்துக்குஅருகே வரை கடல் நீர் புகுந்துவிட்டது. எண்ணூர் பகுதியில் பல வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. கடலூரில் 150 மீனவர்களின்வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

எண்ணூ

இன்று காலை எண்ணூர் அன்னை சிவகாமி நகருக்குள் 3 வது நாளாக தொடர்ந்து நீர் புகுந்தது. மெரீனா, கொட்டிவாக்கம் ஆகியபகுதிகளிலும் கடலின் சீற்றம் மிக அதிகமாக உள்ளது.

அதே போல கடலூரிலும் இன்றும் பல இடங்களில் நீர் புகுந்தது. தேவனாம்பட்டினண், தாழங்குடா, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி ஆகிய இடங்களில் மீனவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அவர் அலறியடித்துக் கொண்டு வீடுகளைக் காலிசெய்தனர்.

இதேபோல கடலூரிலும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. சென்னை நகரில் மெரீனா கடற்கரை, கொட்டிவாகமக் உள்ளிட்டபகுதியிலும் கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் சுமார் 1 கி.மீ. தூரம் வரை உள்ளே புகுந்தது.

பெளர்ணமி, அமாவாசை தினங்களில் வழக்கமாக கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்றாலும் பெளர்ணமி முடிந்தும் கடல்கொந்தளிப்பு தொடர்வதால் பொதுமக்கள் மத்தியில் பீதி அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+