நடுக்கடலில் தமிழக, ஆந்திர மீனவர்கள் மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மற்றும் ஆந்திர மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு மாநிலத்தை சேர்ந்த30க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆந்திர எல்லை அருகே தமிழக கடற்பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம். திடீர் திடீரென ஆந்திர மீனவர்கள், தமிழக மீனவர்களை தாக்கி பணம், மீன்கள் மற்றும் படகுகளைகொள்ளையடித்துச் செல்வது வழக்கம்.

இந் நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் காசிமேடு பகுதியை சேர்ந்த 24 மீனவர்கள் ஆந்திராவிலுள்ள மண்ணூர் என்றஇடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்களை சிறைபிடித்தனர்.

இந்த தகவல் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற தமிழக மீனவர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் ஆந்திரமீனவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். படகுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் 13 ஆந்திர மீனவர்களை தமிழக மீனவர்கள் சிறை பிடித்து சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.ஆந்திர மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டது அறிந்ததும் துறைமுகத்தில் காசிமேடு பகுதி மீனவர்கள் குவிந்தனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் அங்கு போலீஸார் விரைந்து வந்து மீனவர்களை கலைந்துபோகச் செய்தனர். காசிமேடு பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+