For Daily Alerts
Just In
இந்தியா தயாரிக்கும் மயக்க வெடிகுண்டு
பெங்களூர்:
தீவிரவாதிகளை உயிருடன் பிடிப்பதற்காக மயக்கம் ஏற்படுத்தும் கையெறிகுண்டுகளை (கிரனைட்) உருவாக்கும் பணியில்இந்திய பாதுகாப்புத் துறை ஆய்வு மையம் ஈடுபட்டு வருவதாக அதன் இயக்குனர் நடராஜன் தெரிவித்தார்.
பெங்களூரில் பேராசிரியர் பிரம் பிரகாஷ் நினைவு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் இந்திய பாதுகாப்பு அமைச்சரின்அறிவியல் ஆலோசகரான நடராஜன் பேசுகையில், உலகம் முழுவதும் தீவிரவாதிகளால் தற்போது கடும் அச்சுறுத்தல்ஏற்பட்டுள்ளது.
பல சம்பவங்களில் தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க முடிவதில்லை. இதனால் தீவிரவாதிகளை உயிருடன் பிடிப்பதற்காகஅவர்களை மயக்கமடைய வைக்கும் மயக்க கையெறி வெடிகுண்டுகளை உருவாக்கும் பணியில் இந்திய பாதுகாப்பு ஆய்வுமையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த மயக்க வெடிகுண்டுகளை பயன்படுத்துவதன் மூலம் தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க முடியும் என்றார் நடராஜன்.
Comments
Story first published: Monday, August 22, 2005, 5:30 [IST]