ஹெலிகாப்டர் விழுந்த இடம்: கண்டுபிடிப்பதில் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

பனாஜி:

ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த இடத்தை கண்டுபிடித்து விட்டதாக வெளியான தகவலை இந்திய கப்பற் படை மறுத்துள்ளது.

கோவாவிலிருந்து இந்திய கப்பற் படைக்கு சொந்தமான காமோவ்-28 ரக விமானம், கடந்த 19ம் தேதி காலை 11. 50மணியளவில் விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றது. இதில் அதிகாரிகள் உட்பட 6 பேர் இருந்தனர்.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கானாப்பூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மீது பறந்து கொண்டிருந்த போது திடீரெனஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. இதில் 2 பேர் குதித்து தப்பிவிட்டதாகவும், மற்ற 4 பேர் விபத்தில் பலியாகி விட்டதாகவும்தெரிகிறது.

இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் தனது செல்போன் மூலம் விபத்து குறித்து தகவல் கொடுத்துள்ளார்.

விபத்து குறித்து அறிந்ததும், ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த இடத்தை கண்டு பிடிக்கும் பணியிலும், உயிரோடுஇருப்பவர்களை தேடும் பணியிலும் விமானப் படை, கப்பற் படை, கடலோர பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் போலீஸார்உட்பட 700 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் விபத்து நடந்து 3 நாட்களாகியும் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே விபத்து நடந்த இடத்தை கண்டுபிடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை கப்பற் படைமறுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த இடத்தை கண்டுபிடித்து விட்டதாகவெளியான தகவலில் உண்மையில்லை. விபத்து நடந்த இடத்தை கண்டுபிடிக்கும் பணியில் விமானப் படை, கப்பற் படை,கடலோர பாதுகாப்புப் படை மற்றும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மோசமான வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக மீட்புப் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வீரர்கள்தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+