ரவிசுப்ரமணியத்திடம் குறுக்கு விசாரணை: செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ரவி சுப்பிரமணியம் மீதான குறுக்கு விசாரணை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணை சென்னை 33வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய ரவி சுப்பிரமணியத்திடம் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் இன்று குறுக்கு விசாரணைநடத்துவதாக இருந்தது.இந் நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பூமிநாதன், ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தான் புதிய வழக்கறிஞரைநியமிக்க உத்தேசித்திருப்பதால் குறுக்கு விசாரணையை 15 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி உமா மகேஸ்வரி ரவி சுப்பிரமணியம் மீதான குறுக்கு விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்குஒத்தி வைத்தார்.
இதற்கிடையே இன்று நடைபெற்ற விசாரணையில் ஜெயேந்திரர் ஆஜராகவில்லை.












Click it and Unblock the Notifications