கும்பகோணம், திருவாரூரில் லேசான நிலநடுக்கம்
திருவாரூர்:
திருவாரூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் இப் பகுதிகளில் பல இடங்களில் நிலத்திலும் வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.திருவாரூர் அருகே பாப்பாக்கை நத்தம் என்ற இடத்தில் நிலத்தில் 100 மீட்டர் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டது. மேலும் சிலஇடங்களில் 4 அங்குல அகத்துக்கு விரிசல் உண்டானது. மேலும் வீடுகளிலும் விரிசல் உண்டாகியுள்ளது.
இப் பகுதியில் நில நடுக்கத்தை உணர முடியாவிட்டாலும் கூட, வீடுகளில் பரண்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் உருண்டுவிழுந்துள்ளன. சில வீடுகளின் சுவர்களும் பிளந்தன.
அதே போல கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் பகுதியில் கொம்பன் தோப்பு என்ற இடத்தில் நேற்று இரு முறை லோசானநிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர்.
பல வீடுகளில் சுவர்கள் விரிசலடைந்துள்ளன. சாலையிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
சீறும் அலைகள்:
இதற்கிடையே சென்னை, கடலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 4வது நாளாக கடலில் அலைகளின் சீற்றம்மிக அதிகமாக உள்ளது. சென்னை எண்ணூர், நெட்டுக்குப்பம், தாளங்குப்பம், இந்திராகுப்பம், சின்னக் குப்பம் ஆகியபகுதிகளில் இன்றும் கடல் நீர் வெகு தொலைவுக்கு உள்ளே வந்துள்ளது.












Click it and Unblock the Notifications