For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள்!: பிரதமர் வெளியிடுகிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது எழுதியகடிதங்களின் தொகுப்பான சிறையில் விரிந்த மடல்கள் நூலை பிரதமர் மன்மோகன் சிங் செப்டம்பர் 3ம் தேதி சென்னையில்நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார்.

19 மாதங்கள் வேலூர் சிறையில் அடைபட்டிருந்தபோது, பல்வேறு கடிதங்களையும், அறிக்கைகளையும் எழுதினார் வைகோ.இந்தக் கடிதங்களைத் தொகுத்து நூலாக தற்போது வெளியிடுகிறார்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா செப்டம்பர் 3ம் தேதி சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் அரங்கில் நடைபெறுகிறது.

ஆங்கில நூலை பிரதமர் மன்மோகன் சிங்கும், தமிழ் நூலை திமுக தலைவர் கருணாநிதியும் வெளியிடுகிறார்கள். நிகழ்ச்சியில்கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X