For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருட்டு விசிடி: குண்டர் சட்டத்தில் கைதானவர் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருட்டு விசிடி வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட வியாபாரியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்றுசென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

சென்னை பாரிமுனைப் பகுதியில் மின்னணுப் பொருட்கள் வியாபாரம் செய்து வருபவர் தெளலத் ரஹ்மான். இவர் கடந்த மார்ச்மாதம் புதிய தமிழ்ப் படங்களின் திருட்டு விசிடிக்களை விற்று வந்ததாக கூறி போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டஒரு வாரத்தில் ரஹ்மானை குண்டர் சட்டத்தில் அடைத்தனர்.

இதையடுத்து தனது மகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து ரஹ்மானின் தந்தை முகம்மது காசிம் சென்னைஉயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.டி.தினகரன், கிருஷ்ணன் ஆகியோர்முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஒரு படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர், படத்தை வெளியிடும்போதுஅப்படத்திற்கான வெளிநாட்டு உரிமையை விற்று விடுகிறார். அப்படி விற்கப்படும் படத்தின் வெளிநாட்டுப் பிரதியிலிருந்துதயாரிக்கப்படும் விசிடிக்கள்தான் விற்பனைக்கு வருகின்றன.

எனவே இப்படிப்பட்ட விசிடிக்களை விற்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது, இதுசட்டவிரோதமானதாகும் என்று வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதிகள், ரஹ்மானை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று உத்தரவிட்டனர். மேலும், ரஹ்மானைவிடுதலை செய்யுமாறும் போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.

திருட்டு விசிடி விற்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன்புஉத்தரவிட்டார். திரைத் துறையினரின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவை ஜெயலலிதா பிறப்பித்தார். இதைத் தொடர்ந்துதிருட்டு விசிடி விற்றவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அப்படிக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் விடுதலையாகியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X