குண்டர் சட்டம்: அப்பு, ரகு, அய்யருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சங்கரராமன்கொலைக் குற்றவாளிகள் 11 பேருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 24 பேரில் பாஸ்கர் என்ற மாட்டு பாஸ்கர், அனில் என்ற அனில் குமார்,ரஜினிகாந்த் என்ற சின்னா, கதிரவன், மீனாட்சி சுந்தரம், ஆனந்தகுமார், சுந்தரேச அய்யர், ரகு, கே.எஸ்.குமார், அப்பு, சில்வஸ்டர்ஆகிய 11 பேரும் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டனர்.இதை எதிர்த்து 1 1 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 11 பேரையும்குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள்எச்.கே.சேமா, ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
அப்போது, இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு 11 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications