For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கக் கடலுக்கு என்ன ஆச்சு?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுனாமி தாக்குதலுக்குப் பிறகு வங்கக் கடலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே சென்னை, திருவள்ளூர், கடலூர்உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் கடல் கொந்தளிப்பு காணப்படுவதாக புவியியல் நிபுணர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விரிவான ஆய்வுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றங்களும்,லோன நில நடுக்கமும், வீடுகளில் விரிசல், வயல்கள், திறந்த இடங்களில் நீர் கொதித்து கொந்தளிப்பது என புதுப் புது பகீர்அனுபவங்களை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

இந் நிலையில் கடந்த 5 நாட்களாக கடலூர், சென்னை, திருவள்ளூர் மாவட்ட கடல் பகுதியில் பெரும் கொந்தளிப்புகாணப்படுகிறது. கடல் நீர் கரையைத் தாண்டி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளும் சாலைகளிலும் புகுந்து வருகிறது.

மேலும் கடலில் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், திருவாரூர்,கும்பகோணம் பகுதிகளில் லேசான நில நடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக சென்னை அருகே உள்ள எண்ணூ

இந்த கடல் கொந்தளிப்பு குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய பூகம்பவியல் பிரிவின் தலைவர் டாக்டர் ராவ்கூறுகையில்,

வங்கக் கடலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே வழக்கத்தை விட அதிக அளவில்(பெளர்னமி, அமாவாசை தினங்களில்) கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. இதற்கு சுனாமியோ அல்லது நில நடுக்கமோகாரணம் அல்ல. இதற்கான காரணம் குறித்து விரிவான ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X