For Daily Alerts
Just In
மும்பை தாதா அபு சலேமின் கூட்டாளி சுட்டுக் கொலை
மும்பை:
அபு சலேம் தாதா கும்பலைச் சேர்ந்த ஒருவனை மும்பை போலீசார் எண்ளென்டரில் சுட்டுக் கொன்றனர்.
இர்ஷத் ஷேக் (30) என்ற அவன் ஒரு கொலை மற்றும் 5 கொள்ளைகள் தொடர்பாக தேடப்பட்டு வந்தான்.
நேற்றிரவு மும்பை ஒசிவாரா பகுதியில் போலீசார் அவனை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரைத் தாக்கிவிட்டு அவன்தப்பியோட முயலவே அவனை போலீசார் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவன் பலியானான்.
கொல்லப்பட்ட இர்ஷத், அபு சலேம் தாதா கும்பலைச் சேர்ந்தவன் ஆவான் என போலீசார் தெரிவித்தனர்.
Comments
Story first published: Thursday, August 25, 2005, 5:30 [IST]