For Daily Alerts
Just In
தேசிய கொடி அவமதிப்பு: காங். மீது பாஜக புகார்
செங்கம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசியக் கொடியை, தங்களது கட்சிக் கொடியாக மாற்றி, தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்தகாங்கிரஸ் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
செங்கத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்விழாவின்போது, தேசியக் கொடியை கிழித்து, அதை காங்கிரஸ் கொடியாக பயன்படுத்தி அவமரியாதை செய்யப்பட்டுள்ளது.இதைச் செய்த காங்கிரசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியக் கொடிக்கும், காங்கிரஸ் கட்சிக் கொடிக்கும்இடையே அதிக வித்தியாசம் இல்லை.
எனவே காங்கிரஸ் கட்சியின் கொடியைத் தடை செய்ய வேண்டும். அன்னிய நாட்டு மோகம் (சோனியா) இன்னும் தீராதநிலையில் காங்கிரஸ்காரர்களிடமிருந்து தேசப் பற்றை எதிர்பார்த்தால் அது தவறாகும் என்றார் ராஜா.
Comments
Story first published: Thursday, August 25, 2005, 5:30 [IST]