பெண்களுக்கு இட ஒதுக்கீடு: உடனே சட்டம் கொண்டு வர கருணாநிதி கோரிக்கை
சென்னை:
நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாகக் கொண்டு வர வேண்டும்என்றும், இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒத்த கருத்துக்கு வரும் வரை காத்திருக்க முடியாது என்றும் திமுககூறியுள்ளது.
அக் கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்த விஷயத்தில் கட்சிகள் இடையே கருத்தொற்றுமை காண்பதற்காக காத்துக் கொண்டே இருக்க முடியாது. இந்த நீண்டகாத்திருப்பு மூலம் முடிவு தான் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
பிரஞ்ச் தத்துவஞானி வால்டர் ரூஸ்ஸே கூறியது போல, கருத்தொற்றுமை உருவாகாவிட்டால் பெரும்பான்மையோரின் கருத்தேஇறுதியானதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்காக நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களில் 33 சதவீதத்தை இரட்டைஉறுப்பினர் கொண்ட தொகுதிகளாக மாற்றுவதில் எந்தப் பலனும் இல்லை (இது முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள யோசனைஎன்பது குறிப்பிடத்தக்கது). இந்த யோசனை இட ஒதுக்கீட்டுக்கு இன்னொரு தடையாகத் தான் இருக்க முடியும்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவதற்காக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உள்ள இடங்களை அதிகரிக்க வேண்டும்என்ற யோசனையும் தவறானது. இதன்மூலம் பெண்களுக்கு உரிய உரிமைகளை ஆண்கள் விட்டுத் தர மறுக்கிறார்கள் என்றுதான் பொருள்.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்குள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனியாக ஒரு இட ஒதுக்கீடு தேவை என்றகோரிக்கை இப்போதைக்கு அவசியமில்லாதது. முதலில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வருவோம். பின்னர்அதில், பிற்பட்ட-தாழ்த்தப்பட்டோருக்கான தனி ஒதுக்கீட்டை படிப்படியாகக் கொண்டு வரலாம்.
ஆண் ஆதிக்கம் மிக்க இந்த சமூகத்தில் தேர்தலில் பெண்களுக்கு உரிய பங்கு தரப்படவில்லை. எத்தனை காலம் தான் பெண்கள்தங்கள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டே இருக்க முடியும்?. இதனால் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கிறோம்என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications