தலைமைச் செயலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலக உதவியாளர்களுக்கு (பியூன்)பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் அலுவலக உதவியாளர்களாகப் பணியாற்றி வருவோருக்கு நீண்டகாலமாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது.இந் நிலையில் அலுவலக உதவியாளர்களுக்கு, உதவியாளர்களாக (ஆபிஸ் அஸிஸ்டெண்ட்) பதவி உயர்வு வழங்கி தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
மேலும் டைப்பிஸ்டுகள், பதிவறை எழுத்தர்கள், வேன் டிரைவர்கள், டிரைவர்கள் போன்றவர்களுக்கும் ஒரு படி பதவி உயர்வுஅளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 39 ஊழியர்கள் இந்தப் பதவி உயர்வினால் பலன் அடைகிறார்கள்.
தலைமைச் செயலக அலுவலக உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது போல பிற துறைகளிலும் உள்ள அலுவலகஉதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று பிற துறை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications