ஐடியல் சுப்ரமணியத்தின் சொகுசு கார் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

வத்தலகுண்டு:

மோசடி மன்னன் ஐடியல் சுப்பிரமணியத்தின் சொகுசு காரை அவரது சொந்த ஊரான விராலிப்பட்டியில்போலீஸார் பறிமுதல் செய்தனர்.

வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த ஐடியலை போலீஸார்கைது செய்துள்ளனர். அவரை விராலிபட்டி, வத்தலகுண்டு, கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு அழைத்துச்சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந் நிலையில் ஐடியலின் கூட்டாளிகளான செளந்தர் என்ற செளந்தரபாண்டியன், மணிகண்டன் ஆகியோரையும்போலீஸார் கைது செய்தனர். அவர்களை தங்களது காவலில் எடுத்த போலீஸார் விராலிப்பட்டி, வத்தலகுண்டு,திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விராலிப்பட்டியில் நடந்த விசாரணையின்போது ஐடியலின் சொகுசுக் கார் குறித்த தகவல் போலீஸாருக்குக்கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்தக் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அந்தக் கார் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+