For Daily Alerts
Just In
இந்தியா உருவாக்கியுள்ள தோரியம் அணு உலை
டெல்லி:
தோரியத்தைக் கொண்டு இயங்கும் அணு உலையை இந்தியா உருவாக்கியுள்ளது. மிக ரகசியாகக் கட்டப்பட்டு வந்த இந்த அணுஉலை குறித்த விவரத்தை இன்று தான் இந்தியா வெளியுலகுக்குத் தெரிவித்தது.
2 ஆண்டுகள் வரை எரிபொருளை மீண்டும் நிரப்பாமலேயே இயங்கும் திறன் கொண்ட இந்த அணு உலை உலகிலேயே மிகப்பாதுகாப்பானது என பாபா அணு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.இந்த அணு உலையை இயக்க யுரேனியம் தேவையில்லை. இதனால் இதை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.இந்த அணு உலை தோரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இந்தியாவில் தோரியம் ஏராளமான அளவில்கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7 ஆண்டுகளாக இதை இந்தியா உருவாக்கி வந்ததாக பிரசல்ஸ் நகரில் இன்று நடந்த அணு ஆராய்ச்சி குறித்த மாநாட்டில்பாபா ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளான ஜகன்நாதன் மற்றும் உஷா பால் ஆகியோர் தெரிவித்தனர்.
Story first published: Thursday, August 25, 2005, 5:30 [IST]