திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை
ஆரணி:
ஆரணியை அடுத்த சதுப்பேரி கிராமத்தைச் சேர்ந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு செலவு செய்வதில்அண்ணனுக்கும், அண்ணிக்கும் தகராறு எற்பட்டது. அதனால் மனமுடைந்த பெண் செவ்வாய்கிழமை தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார்.
ஆரணியை அடுத்த சதுப்பேரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் குணாளன்,மகள் தமிழ்செல்வி, ராமகிருஷ்ணன்இறந்துவிட்டதால் தமிழ்செல்வியை அண்ணன் குணாளன் வளர்ந்து வந்தார். குணாளன் பரமேஸ்வரி என்பவரை திருமணம்செய்துகொண்டார்.தமிழ்செல்விக்கு திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளையும் பார்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.திருமணத்துக்காக செலவு செய்து வந்ததில் மனைவி பரமேஸ்வரி தகராறு
செய்தார். இதனால் குணாளனுக்கும் பரமேஸ்வரிக்கும் பெரும் தகராறு எற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த தமிழ்செல்வி அண்ணனுக்கும், அண்ணிக்கும் என்னால் தகராறு வராகூடாது என செவ்வாய்கிழமைஅவர்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கொட்டகையில்
தமிழ்செல்வி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறிந்து கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன் களம்பூர் காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார்.வழக்கு பதிவு செய்தபோலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழ்செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்விசாரணை நடத்தி வருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications