பெங்களூர்: சேலத்தைச் சேர்ந்த 35 கொத்தடிமைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பெங்களூர் அருகே கொத்தடிமைகளாக இருந்த 35 பேரை சேலம் போலீஸார் மீட்டுள்ளனர்.பெங்களூர் அருகேநெலமங்களா என்ற இடத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 குடும்பத்தினர் கல் குவாரி ஒன்றில்கொத்தடிமைகளாக இருந்து வந்தனர். அவர்களுக்கு குறைந்த அளவிலான ஊதியமே கொடுக்கப்பட்டு வந்தது
சரியான சாப்பாடு கொடுக்காமலும், அடித்து, உதைத்தும் அவர்களை குவாரி உரிமையாளர்கள்கொடுமைப்படுத்தி வந்தனர். இந்த குழுவில் இருந்த வெள்ளையன் என்பவர் அங்கிருந்து தப்பி சேலம் மாவட்டம்ஓமலூர் வந்து சேர்ந்தார்.ஓமலூரில் உள்ள தொண்டு நிறுவனத்தில் தங்களது நிலை குறித்து அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார்உதவியுடன் கொத்தடிமைகளாக இருந்த 35 பேரை போலீஸார் அங்கிருந்து மீட்டு சேலம் கொண்டு வந்தனர்.
இதேபோல மேலும் பல குடும்பங்கள் பெங்களூரில் கொத்தடிமைகளாக இருப்பதாக மீண்டு வந்தவர்கள்தெரிவித்துள்ளனர். அவர்களையும் மீட்க போலீஸார் நிடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications