சினிமா ஆசை: பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்

Subscribe to Oneindia Tamil

ராயபுரம்:

சினிமா நடிகை ஆக்குவதாக கூறி பெங்களுரைச் சேர்ந்த அப்பாவி இளம் பெண்களை சென்னைக்கு அழைந்து வந்துவிபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் போலீசில் பிடிபட்டது.

சென்னை கொளத்துர் கம்பர் நகர் அவ்வையார் தெருவில் உள்ள ஒரு விட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மாறு வேடத்தில் விபச்சாரம் நடைபெறும் வீட்டிற்கு சென்றனர்.

அங்கிருந்த சிதம்பரம் (60) அவரது மனைவி ராணி (45) அகியோர் ஒரு நபருக்கு தலா ரூ. 1,000 வாங்கிக் கொண்டு உள்ளேசென்று 2 பெண்களை அழைத்து வந்தார்.

இதையடுத்து வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக புரோக்கர்கள் சிதம்பரம், ராணி மற்றும் விபச்சாரத்தில்ஈடுபட்ட நெல்லூரை சேர்ந்த லட்சுமி (27), ஜோதி (24) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையின்போது லட்சுமி, ஜோதி இருவரும் போலீசாரிடம் கூறும்போது, எங்களை நெல்லுரை சேர்ந்த உமா என்ற பெண்சினிமாவில் நடிக்க வைப்பதாக நம்ப வைத்து சென்னைக்கு அழைத்து வந்தார்.பின்னர் அறையில் பூட்டி வைத்து அடித்துதுன்புறுத்தினார் என்றனர்.

இதையடுத்து உமாவை போலீசார் கைது செய்து அவரது வீட்டை சோதனையிட்டனர்.அப்போது ஒரு அறையில் சைலஜா என்றஇளம் பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

உமாவிடம் நடத்திய விசாரணையில், அவர் நெல்லூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல இடங்களை சேர்ந்த பெண்களைசினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.

உமா, ராணி, சிதம்பரம் மற்றும் இளம் பெண்கள் 3 பேரையும் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியிடம்தனிப்படை போலிசார் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட 3 பெண்களையும், பெண்கள் காப்பாகத்தில் போலீசார் சேர்த்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+