பள்ளி மாணவியிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் பள்ளி மாணவியான சிறுமியை கத்தி முனையில் கடத்திய வாலிபர், அவரது நகைகளைப் பறித்துக் கொண்டுதப்பியுள்ளார்.

சென்னை முகப்பேரில் உள்ளது நவரத்னா அபார்ட்மெண்ட். இங்கு வசித்து வரும் யாமினி (வயது 9) என்ற சிறுமி நேற்றிரவுகடைக்குச் செல்லும்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த வாலிபர் அவரது கழுத்தில் கத்தியை வைத்தார்.

சத்தம்போட்டால் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டியபடி சிறுமியின் வாயைப் பொத்தினார். பின்னர், யாமினியை ஆள்நடமாட்டம் இல்லாத அவைத்துச் சென்று தோடு, வளையல், செயின் ஆகிய நகைகளை பறித்துக் கொண்டார். மோதிரத்தைபறிக்க முடியாததால் அதை மட்டும் விட்டுவிட்டுத் தப்பிவிட்டார்.

இந்தப் பகுதியில் சமீபத்தில் தான் இதே போன்ற ஒரு நகை பறிப்பு சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அடுக்கு மாடிக்குடியிறுப்புகள் நிறைந்த இந்த இடத்தில் தெருக்களில் போதிய விளக்குகள் இல்லை.

இதைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் கத்தி முனை வழிப்பறிகள் நடந்து வருகின்றன. இந்த வேலையில் ஈடுபடுவது இப் பகுதிஇளைஞர்கள் சிலர் தான் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+