மகளிர் இட ஒதுக்கீடு: திமுக நடத்தும் பிரமாண்ட பெண்கள் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் செப்டம்பர் மாதம் திமுக மகளிர் அணிசார்பில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அக் கட்சிஅறிவித்துள்ளது.
தென் சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் திமுகதலைவர் கருணாநிதி பேசுகையில்,மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதா தொடர்பான நமது கருத்தை ஏற்கனவே தெளிவாக தெரிவித்து விட்டோம்.
இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில்லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் பிரமாண்டமான பேரணி நடத்தப்படும்.
எந்தத் தேதியில் பேரணி நடைபெறும் என்பது வேலூர் மண்டல மாநாட்டில் அறிவிக்கப்படும்.
இந்தப் பேரணியில் திமுக மகளிர்கள் தவிர பல்வேறு பெண்கள் அமைப்புகளையும் கலந்து கொள்ள வைக்கநடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications