விநாயகர் சதுர்த்தி: மிகத் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை:
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விநாயக் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதையொட்டி தமிழகம் முழுவதும் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் திருவல்லிக்கேணி,கேகே நகர், எம்ஜிஆர் நகர், வட பழனி, புரசைவாக்கம், நங்கநல்லூர், ஆலந்தூர் உள்பட பல இடங்களில் 300க்கும் அதிகமானசிலைகள் வைக்க போலீசார் அனுமதி தந்துள்ளனர்.
11ம் தேதி வினாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் சிலைகள் கடலில் கரைக்கப்படும்.இதற்காக நீலாங்கரை, திருவொற்றியூர், காசிமேடு, பட்டினப்பாக்கம் உள்பட 6 கடற்கரைப் பகுதிகளை போலீசார்ஒதுக்கியுள்ளனர்.
விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும்போது பெரும் பரபரப்பான சூழல் நிலவுவது உண்டு. ஊர்வலம் செல்லும் பாதைகளில்மோதல்கள் மூண்டதும் உண்டு. இதனால் ஊர்வலப் பாதை குறித்து முடிவு செய்ய காவல்துறையினர் தீவிர ஆலோசனையில்ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சீர்குலைக்க தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.நேசனல் டிபன்ஸ் போர்ஸ் என்ற தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பு இற்கான சதியை தீட்டியுள்ளதாக உளவுத்துறைஎச்சரித்துள்ளது.
இதையடுத்து இந்தச் சதியை முறியடித்து ஊர்வலத்தை பாதுகாப்பாக நடத்தி முடிக்க போலீசார் தீவிர முயற்சிகளில்ஈடுபட்டுள்ளனர்.
சென்னை நகரில் அமைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு 24 மணி நேர பாதுகாப்பு போட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதேபோல விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், கரைக்கவும் இந்து அமைப்புகளுக்கு தனித்தனியாக நேரம்ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயுதப் படையினரை நிறுத்தவும், ஊர்வலத்துக்கு வரலாறு காணாத பாதுகாப்பை வழங்கவும்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் மட்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications