இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே-ரணில் மோதல்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை அதிபர் தேர்தலில் சந்திரிகாவின் கட்சியின் சார்பில் பிரதமர் ராஜபக்ஷே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ரணில்விக்கிரமசிங்கே போட்டியிடுகிறார்.அதிபர் சந்திரிகாவின் பதவிக் காலம் இந்த ஆண்டு டிசம்பரோடு முடிந்துவிடும் என அந் நாட்டு உச்ச நீதிமன்றம்அறிவித்துவிட்டதால், அதிபர் பதவிக்கு இந்த ஆண்டே தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தனது சுதந்திரா கட்சியின் சார்பில் பிரதமர் ராஜபக்ஷேயை போட்டியிட வைக்க சந்திரிகா முடிவு செய்துள்ளார்.அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே போட்டியிடவுள்ளார்.
இதற்கிடையே இந்தியா வந்துள்ள அந் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் அருணா பண்டாரநாயகே நேற்று பிரதமர்மன்மோகன் சிங்கையும், வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங்கையும் சந்தித்து அந் நாட்டின் அரசியல் நிலை குறித்தும்,புலிகளுடான அமைதி முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications