For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை சிறையில் தாவூத்- சோட்டா ராஜன் கும்பல்கள் இடையே கடும் மோதல்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

மும்பை தாதாக்களும் பரம வைரிகளுமான தாவூத் இப்ராகிம் மற்றும் சோட்டா ராஜனின் கூட்டாளிகளுக்கு இடையே மும்பைசிறையில் பெரும் மோதல் வெடித்தது.

ஆர்தர் ரோடு சிறையில் நடந்த இந்த பயங்கர அடிதடி மோதலில் சிறைக் காவலர்கள் பலர் படுகாயமடைந்தனர்.

சிறையின் விரிவாக்கத்திற்காக குவிக்கப்பட்டிருந்த செங்கல், கற்கள் ஆகியவற்றை வீசி இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பினருக்கும் இடையே சிக்கிக் கொண்ட காவலர்கள் பலத்த காயமடைந்தனர்.

இரு கும்பல்களையும் சேர்ந்தவர்கள் தனித்தனி செல்களில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று சோட்டா ராஜனின் ஆட்களைஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு போலீசார் இடம் மாற்றினர்.

அப்போது அவர்கள் தாவூத் கும்பல் அடைக்கப்பட்டுள்ள பகுதி வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாககுவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மிகக் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். பின்னர், கல் வீச்சில் இறங்கினர். இதையடுத்துஅங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X