எஸ்.எம்.எஸ். அனுப்பினால் ரயில் டிக்கெட் ரெடி!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செல்போன் மூலம் ரயில்களில் டிக்கெட் முன் பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமும் சில செல்போன் நிறுவனங்களும் இணைந்து இத் திட்டத்தைஅறிமுகப்படுத்தியுள்ளன.ஐடியா செல்லுலார் நிறுவனம், டெல்லி மகாநகர் தொலை பேசி நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் இன்போ காம் ஆகியவற்றுடன்இணைந்து இத் திட்டத்தை ரயில்வே அறிமுகப்படுதியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி மூலமாக இதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பதால் ஐசிஐசிஐ வங்கிச் சேவைகளைபயன்படுத்துவோரே இந்த வசதியை இப்போதைக்கு பயன்படுத்த முடியும்.
www.irctc.co.inஎன்ற இணையத் தளத்திற்குச் சென்றால் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி என்ற முழு விவரத்தையும் அறியலாம்.












Click it and Unblock the Notifications