மதுரை, விழுப்புரத்தில் பேய் மழை: இடி தாக்கி 4 பேர் பலி
மதுரை:
மதுரை, விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த இடி, மின்னுலுடன் மூன்றாவது நாளாக கன மழை பெய்து வருகிறது. இதில் இடி தாக்கி 4 பேர் பலியாயினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரையிலும் சுற்றுப் பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.உத்தங்குடி பகுதியில் இடி தாக்கியதில் பாண்டியன் (40), சகோதரர்களான பாஸ்கரன் (40), வைரபாண்டி (37) ஆகிய மூவரும் உடல் கருகி பலியாயினர்.
மூவரும் தங்களது உறவினர் ஒருவரின் உடலை மயானத்தில் புதைத்துவிட்டுத் திரும்பும்போது இடி தாக்குதலுக்கு உள்ளாயினர். இதில் கண்ணன், பாலமுருகன் என்ற இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அதே போல விழுப்புரம் மாவட்டத்திலும் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி பல பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுகிறது.
உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் சேகர் என்ற பிளஸ் டூ படிக்கும் மாணவன் இடி தாக்குலுக்கு உள்ளாகி உயிரிழந்தான்.












Click it and Unblock the Notifications