சட்டத்தை மதிக்காத போலீஸ்: அரவாணிகள் பாய்ச்சல்
சென்னை:
அரவாணிகளை கிண்டல் செய்தால் 7 வருட சிறை தண்டனை என்ற சட்டத்தை போலீசார் மதிப்பதே இல்லை என்றும், தங்களைகிண்டல் செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் அரவாணிகள் சங்கம் புகார் கூறியுள்ளது.
சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அரவாணிகள் நலச் சங்கத் தலைவரும், அரசு வேலை வாய்ப்பைப்பெற்ற முதல் அரவாணியுமான டயானா பேசுகையில்,எங்களை வீட்டில் இருந்தும் விரட்டியடிக்கிறார்கள். சமூகத்திலும் கிண்டலுக்கு ஆளாகிறோம். அரவாணிகளை கிண்டல்செய்தால் ஏழரை ஆண்டுகள் சிறை என்று சட்டத்தில் உள்ளது. ஆனன், அதை போலீசார் செயல்படுத்துவதே இல்லை.
அரவாணிகளை கிண்டல் செய்யும் வகையில் நடிக்க வேண்டாம் என்று நடிகர் சங்கத்திடம் மனு கொடுத்துள்ளோம். நாங்களும்உங்களைப் போல மனிதர்கள் தானே. தமிழகத்தில் அரவாணிகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புப் பணியில்இறங்கியிருக்கிறோம்.
எங்களுக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் அரசே வீடு வழங்க வேண்டும்.
திண்டுக்கல், கடப்பா ஆகிய இடங்களில் அரவாணிகளுக்கு முறையற்ற வகையில் மிக அபாயகரமான வகையில் அறுவைசிகிச்சைகளை (பால் மாற்ற அறுவை சிகிச்சை) சிலர் செய்து வருகின்றனர். இதைத் தடுக்க அரசு மருத்துவமனைகளிலேயே இந்தஅறுவை சிகிச்சைகளைச் செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications