For Daily Alerts
Just In
சேலம்: மின்சாரம் தாக்கி பாதிரியார், மனைவி சாவு
சேலம்:
சேலத்தில் மின்சாரம் தாக்கி பாதிரியாரும் அவரது மனைவியும் பலியாயினர்.
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தின் பாதிரியாராக இருந்தவர் ஜோஷி விஜய்குமார் (வயது 58).இவரது மனைவி சாராள் (55). இவர்கள் தேவாலய வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தனர்.நேற்று மழை பெய்ததால் வெளியில் கம்பியில் போட்டிருந்த துணிகளை எடுக்க ஆரம்பித்தார் சாராள். அப்போது அந்தக்கம்பியில் மின் கசிந்து மின்சாரம் பாய்ந்தது.
இதையடுத்து சாராள் மீது மின்சாரம் தாக்கியது. அலறியபடி தூக்கி வீசப்பட்ட அவரைத் தூக்க முயன்றார் பாதிரியார் விஜய்குமார்.அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் உடல் கருகி பலியாகிவிட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இச் செய்தி அறிந்து ஆயிரக்கணக்கான கிருஸ்துவ மக்கள் தேவாலயத்துக்கு திரண்டு வந்து பலியானவர்களுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
Comments
Story first published: Sunday, August 28, 2005, 5:30 [IST]