ஆற்காடு மீது அவமதிப்பு வழக்கு: மாநகராட்சியில் தீர்மானம்
சென்னை:
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக தவறான தகவல் தந்து நீதிமன்றத்தை திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமிஅவமதித்துவிட்டதாகவும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் துணை மேயர் கராத்தே தியாகராஜன் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில்,சென்னை அண்ணா நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ. 10 கோடி மதிப்புள்ள 18 கிரவுண்டு நிலத்தை முன்னாள்அமைச்சரும், திமுக பொருளாளருமான ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்புசெய்துள்ளனர்.இந்த நிலத்தை மீட்க மாநகராட்சி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந் நிலையில் ஆற்காடு வீராசாமியும், அவரது தம்பிதேவராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்றும் இதுதொடர்பாக நீதிமன்றம்தீர்ப்பளித்து விட்டதாகவும் தவறான தகவலைக் கொடுத்துள்ளனர். உண்மையில் இந்த வழக்கு இன்னும் நிலுவையில்தான்உள்ளது.
எனவே தவறான தகவலைக் கொடுத்து நீதிமன்றத்தை அவமதித்து விட்டதால், ஆற்காடு வீராசாமி மீது நீதிமன்ற அவமதிப்புவழக்கு தொடர மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீராசாமி குடும்பத்தாரின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தையும் மீட்க ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானம் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக கராத்தே தெரிவித்தர்.












Click it and Unblock the Notifications