சென்னையிலும் குண்டுவெடிப்பு அபாயம்: பாதுகாப்பு அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெங்களூரில் ஜனதா தளம், காங்கிரஸ் அலுவலகங்களில் குண்டு வெடிப்புகள் நடந்ததைத் தொடர்ந்து சென்னைநகரிலும் வெடிகுண்டுகள் வெடிக்கலாம் என்ற தகவல் வந்துள்ளதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரில் ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சி தலைமையகங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.இதில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லாவிட்டாலும் கட்சி அலுவலகங்களில் குண்டு வெடித்துள்ளது அரசியல்வாதிகளைஅதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திராவைத் தொடர்ந்து நக்சலைட்டுகளுக்கு கர்நாடகம் தடை விதித்தது. இதனால் நக்ஸல்கள் தான் இந்தகுண்டுவெடிப்பை நடத்தியதாகக் கருதப்படுகிறது. இதனால் கர்நாடக கதர் சட்டைகளும், ஐக்கிய ஜனதாதளத்தினரும் நக்ஸல்கள் பயத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.

இந் நிலையில் சென்னை நகரிலும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழலாம் என்று தமிழக காவல்துறையைஉளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை நகரின் நுழைவாயில்களில் தீவிர கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரவு நேர வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், முக்கிய பஸ் நிலையங்கள்,கோவில்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பாலங்கள், கட்சி அலுவலகங்கள் எனஅனைத்து முக்கிய இடங்களிலும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக பாரதீய ஜனதாக் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்டவற்றின் தலைமை அலுவலகங்களிலும் போலீஸார்அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+