பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை ஸ்தம்பிப்பு!
சென்னை:
சென்னை மற்றும் வட மாவட்டங்கள் பலவற்றில் இன்று பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை முற்றிலும் முடங்கிப் போனது.செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு தகவல் தொடர்பு பெரும் பாதிப்படைந்தது.
பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையை தமிழகத்தில் ஏராளமான பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவையில் பல்வேறுகோளாறுகள் இருந்தபோதிலும், குறைந்த கட்டணம் என்பதால் பொது மக்களிடையே பி.எஸ்.என்.எல். செல்போன் சேவைக்குநல்ல வரவேற்பு உள்ளது.இந் நிலையில் சென்னை மற்றும் வட மாவட்டங்கள் பலவற்றில் நேற்று இரவு முதலே, செல்போன்கள் சரிவர இயங்கவில்லை.இன்று அதிகாலை முதல் செல்போன் சேவை முற்றிலும் முடங்கி விட்டது.
போன் செய்யவும் முடியவில்லை, எந்த அழைப்பையும் பெற முடியவில்லை என்பதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்திஅடைந்தனர்.
செல்போன் இணைப்பு கோபுரங்களில் ஏற்பட்ட நெட்வோர்க் பிரச்சனை காரணமாகவும், ஸ்விட்சிங் யூனிட்டில் ஏற்பட்டகோளாறு காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதை சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் பி.எஸ்.என்.எல்.அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் ப்ரீபெய்ட் சேவை மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். ஆனால், பி.எஸ்.என்.எல். செல்போன்சேவை இன்று பிற்பகல் வரை முற்றிலுமாகவே முடங்கிப் போய்விட்டது. மாலைக்குள் நிலைமை சரியாகிவிடும் எனஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.