சென்னை மாநகராட்சி: திமுக கவுன்சிலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்!
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில், திமுக கவுன்சிலர்கள் 2 பேர் போலீஸாரால் குண்டுக்கட்டாகவெளியேற்றப்பட்டனர். இதைக் கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
மாநகராட்சி மாமன்றக் கூட்டம் 3 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று காலை கூடியது. அப்போது திமுகஎதிர்க்கட்சித் தலைவர் சி.வி.மலையன் எழுந்து ஒரு ஒழுங்குப் பிரச்சினையை கிளப்பினார்.மாநகராட்சி துணை மேயர் மற்றும் ஆணையரின் குறுக்கீடுகள் காரணமாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் குற்றம் சாட்டினார். ஆனால் மலையன் தொடர்ந்து பேச துணை மேயர்கராத்தே தியாகராஜன் அனுமதி மறுத்தார்.
இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள்கோஷமிட்டனர். இதையடுத்து அவையில் அமளி ஏற்பட்டது.
இந் நிலையில் திமுகவைச் சேர்ந்த மா.சுப்ரமணியம், கல்யாண சுந்தரம் ஆகிய இருவரையும் வெளியேற்றுமாறுஅவைக் காவலர்களுக்கு துணை மேயர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு விட்டனர். இதைக்கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் அவைக் கூட்டம் தொடர்ந்துநடந்தது.












Click it and Unblock the Notifications