தாவூதை ஒப்படைக்க இந்தியா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தாவூத் இப்ராகிம் உள்பட இந்தியாவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட 30 தீவிரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என பாகிஸ்தானிடம் மத்திய அரசு மீண்டும் கோரவுள்ளது.
இந்திய-பாகிஸ்தான் உள்துறைச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் தொடங்குகிறது.இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறைச் செயலாளர் துகல்,
இந்தியாவில் சதிச் செயல்கள், தீவிரவாதச் செயல்கள், போதை மருந்து கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட, பாகிஸ்தானில்பதுங்கியுள்ள கிரிமினல்கள், தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் கோரவுள்ளோம்.
இந்தத் தீவிரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தான் தரப்பிடம் தரப்படும் என்றார்.
இந்தப் பட்டியலில் தாவூத் இப்ராகிமின் பெயரும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது போல மத்திய அரசு பலமுறை கோரிக்கைவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தக் கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் இதுவரை செவி சாய்க்கவில்லை.












Click it and Unblock the Notifications