ஒரே நாளில் 43 பேரைக் கடித்த வெறி நாய்!

Subscribe to Oneindia Tamil

அரக்கோணம்:

அரக்கோணத்தில் ஒரே நாளில் வெறிநாய் கடித்து 43 பேர் காயமடைந்தனர்.

அரக்கோணம் பஸ் நிலையப் பகுதியில் ஒரு நாய் வெறி பிடித்த நிலையில் சுற்றி வருகிறது.

நேற்று காலை முதல் இந்த நாய் அப்பகுதியில் வருவோர், போவோரை எல்லாம் விரட்டி, விரட்டிக் கடித்துக்காயப்படுத்தியது. மாலை வரை மொத்தம் 43 பேர் இந்த நாயிடம் கடிபட்டனர்.

இதனால் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடிபட்ட அனைவரும் அரசு மருத்துவமனைக்குசென்றபோது அங்கு நாய்க் கடிக்கான தடுப்பூசி இல்லை என்று ஊழியர்கள் அலட்சியத்துடன் கூறினர். இதனால்பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

பின்னர் பலர் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று காசு கொடுத்து ஊசி போட்டுக் கொண்டனர்.

ஆனால் தனியார் மருத்துவமனையில் காசு கொடுத்து ஊசி போட்டுக் கொள்ளும் அளவுக்கு வசதியில்லாத பலர்விதியை நொந்தபடி வீடு போய்ச் சேர்ந்தனர்.

43 பேரைக் கடித்துக் குதறிய வெறி நாய் இன்னும் பிடிபடவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நகராட்சியில் எந்த ஊழியரும் இல்லை.

இன்று திங்கள்கிழமை டூட்டி ஆரம்பித்த பின்னரே நாயைப் பிடிக்கும் வேலையில் நகராட்சி ஊழியர்கள்ஈடுபட்டுள்ளனர்.

அடடா, இந்த முன்சிபாலிட்டியில் என்ன ஒரு பங்சுவாலிட்டி..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+