சென்னையில் இன்னொரு மோசடி மன்னன்: பல லட்சத்துடன் தலைமறைவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மோசடி மன்னர்கள் ஆதி கேசவன், ஐடியல் சுப்ரமணியன் வரிசையில் சென்னை அருகே இன்னொரு மோசடி மன்னன் குறித்தும்புகார்கள் குவிந்து வருகின்றன.

வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடி பணத்தை மோசடி செய்ததாககைதானார் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன். அதேபோல வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி பெருமளவில்பண மோசடியில் ஈடுபட்ட கொடைக்கானலைச் சேர்ந்த ஐடியல் சுப்பிரமணியும் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் சென்னை அருகே உள்ள மாதவரம் பகுதியில் இதேபோல ஒரு மோசடி மன்னன் குறித்து செய்திகள் வரஆரம்பித்துள்ளன.

மூலக்கரையைச் சேர்ந்தவர் குமரன் மாதவரம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில், அஸ்வினி ஹோம் பைனான்ஸ் என்ற பெயரில்கடன் வழங்குவதாகக் கூறி பலரிடம் ஆயிரக்கணக்கான ரூபாயை கமிஷனாக வாங்கியுள்ளார்.

ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு கேட்ட கடன் தொகையை இவர் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். பணம்கொடுத்தவர்கள், அவரை நெருக்கவே, வாங்கிய பணத்தை செலவழித்து விட்டதாக கூறியுள்ளார் குமரன்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கமிஷன் கொடுத்தவர்கள், மாதவரம் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்துதற்போது குமரன் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

அவரைப் பிடித்து விசாரித்தால், அவருக்குள் மறைந்திருக்கும் ஆதி கேசவன் வெளிப்படலாம் என போலீஸார் நம்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+