அரசு அலுவலர்கள் மாநாட்டில் ஜெ. பங்கேற்கிறார்!!!!
சென்னை :
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடனான மோதலுக்குப் பிறகு மதல் முறையாக அரசு ஊழியர்கள் மாநாட்டில்முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
வேலை நிறுத்தம் செய்த லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒரே நாளில் கூண்டோடு டிஸ்மிஸ்செய்து இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா. இந்த நடவடிக்கைக்குப் பிறகு அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஜெயலலிதா மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது.ஆனால் சமீப காலமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகளை சரமாரியாகஅறிவித்து வருகிறார் ஜெயலலிதா. சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசு ஊழியர்களின்அதிருப்தியைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்.
இந் நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் (ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடந்துவரும் சங்கம்) சார்பில் சென்னையில் வரும் அக்டோபர் மாதம் மாநில மாநாடு நடத்தவுள்ளது.
இந்த மாநாட்டில் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் கோ.சூரியமூர்த்திதலைமையில் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சூரியமூர்த்தி கூறுகையில், அக்டோபர் 22ம் தேதி சென்னை தீவுத்திடலில் ஒன்றியத்தின் 56வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா இதில் கலந்து கொள்கிறார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தங்களதுகுடும்பத்துடன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பிலும்நன்றி தீபம் கொண்டு வரப்பட்டு முதல்வரிடம் வழங்கப்படும்.
மாநாட்டில் அனைத்து அரசு ஊழியர்களும் கலந்து கொள்ள வசதியாக அக்டோபர் 21 மற்றும் 22 ஆகியதேதிகளில் ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்குமாறும் முதல்வரிடம் கோருகிறோம் என்றார் சூரியமூர்த்தி.
இந்த மாநாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக மேலும் சில சலுகைகளை ஜெயலலிதா அறிவிப்பார்என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications