நடுச் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரசாயன லாரி!
Subscribe to Oneindia Tamil
கரூர்:
ரசயானப் பொருளை ஏற்றி வந்த லாரியிலிருந்து திடீரென வெண்புகை கிளம்பியதால் கரூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.காரைக்காலைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து ரசாயனப் பொருளை ஏற்றிக் கொண்டு அந்த லாரி ஈரோடு சென்றது.கரூர் புறநகர்ப் பகுதியில் லாரி சென்றபோது திடீரென லாரியின் டேங்கரில் இருந்து ரசாயன வெண்புகை கிளம்பியது.
இதையடுத்து பீதியடைந்த ஓட்டுனர் லாரியை நடுச் சாலையில் நிறுத்தி விட்டு கீழே குதித்தார். பின்னர் தீயணைப்புப்படையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து வெண்புகையைக் கிளப்பிய ரசயானப் பொருள்மீது தண்ணீர் ஊற்றி அதை குளிர்வித்தனர்.
அதிக வெப்பம் காரணமாக புகை கிளம்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications