மும்பையில் கட்டடம் இடிந்து 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பையில் மேலும் ஒரு பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாயினர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பையில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக பழைய கட்டடங்கள் அனைத்தும் மோசமான நிலையை அடைந்துள்ளன.கடந்த 15 நாட்களில் 3 கட்டடங்கள் இடிந்து விழுந்து பலர் பலியாகியுள்ளனர்.இந் நிலையில் நேற்றிரவு தெற்கு மும்பையில் நியூ மெரைன் லைன்ஸ் பகுதியில் பஞ்சரத்னா ஹோட்டலுக்கு அருகே ஒரு பழைய 3மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.
இதில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாயினர். மேலும் 13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.
இரு வாரங்களுக்கு முன் நாக்பாடா தெம்கூர் ரோட்டில் நூற்றாண்டு பழைய கட்டடம் ஒன்று இடிந்து 11 பேர் பலியாயினர்.டார்டியோ பகுதியில் ஒரு கட்டடம் இடிந்து பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications