For Quick Alerts
For Daily Alerts
Just In
சங்கரராமன்: வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி 5 குற்றவாளிகள் மனு
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கைதாகியுள்ள 9 பேர் தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிசெங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை கடந்த 19ம் தேதி நீதிபதி அக்பர்அலி தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அருள், மீனாட்சி சுந்தரம், சில்வஸ்டர் ஸ்டாலின், தேவராஜ், சேகர் ஆகிய 5 பேரும்சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் றையீடு செய்துள்ளனர்.
விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றுஅவர்கள் கூறியுள்ளனர்.
Comments
Story first published: Tuesday, August 30, 2005, 5:30 [IST]