For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்புவின் ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள கூலிப் படைத் தலைவன் அப்புவின் ஜாமீன் மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

அப்புவின் ஜாமீன் மனு ஏற்கனவே செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் அப்பு.

இந்த மனுவை நீதிபதி தணிகாச்சலம் விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில் கூறுகையில், கூலிப் படைத்தலைவனாக அப்பு செயல்பட்டுள்ளார். அவரை விடுவித்தால் சாட்சிகளைக் கலைத்து விடுவார்.

ஆள்பலமும், பண பலமும் கொண்டவர் அப்பு. எனவே அவர் எங்காவது தப்பிச் செல்லவும் வாய்ப்புள்ளது.எனவே ஜாமீன் அளிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X