அப்புவின் ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள கூலிப் படைத் தலைவன் அப்புவின் ஜாமீன் மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

அப்புவின் ஜாமீன் மனு ஏற்கனவே செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் அப்பு.

இந்த மனுவை நீதிபதி தணிகாச்சலம் விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில் கூறுகையில், கூலிப் படைத்தலைவனாக அப்பு செயல்பட்டுள்ளார். அவரை விடுவித்தால் சாட்சிகளைக் கலைத்து விடுவார்.

ஆள்பலமும், பண பலமும் கொண்டவர் அப்பு. எனவே அவர் எங்காவது தப்பிச் செல்லவும் வாய்ப்புள்ளது.எனவே ஜாமீன் அளிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+